சாதன சதுஷ்டய சம்பத்தி - 2


வைராக்யம்
ராக: என்றால் பற்று, ஒட்டிக் கொள்ளுதல் என்று பொருள்.
விராக: என்றால் பற்றின்மை, பற்று நன்றாகப் போய் விடுதல் என்று பொருள்.
எனவே வைராக்யம் என்பதற்கு பற்று நீங்கிய தன்மை, பற்றை விட்ட தன்மை உடையமனநிலை என்று பொருள்.
வைராக்யம் என்பது ஒரு செயலன்று. அது ஒரு சாத்யம். A state of mind.

எதில் பற்றற்ற தன்மை இருக்க வேண்டும்?
“இக அமுத்ர போகே விராக:”
இந்த உலகிலும், பிற உலகங்களிலும் இன்பத்தைக் கொடுக்கும் பொருட்களில்
விருப்பமில்லாது இருத்தலே வைராக்யம் எனப்படும்.
இவ்வுலகப் பொருட்களை சாஸ்திரம் இரு வகையாகப் பிரிக்கிறது.
ஒன்று த்ருஷ்டம் அதாவது பார்க்கப்படும் பொருட்கள். மற்றொன்று ஸ்ருதம். கேட்கப்பட்ட பொருட்கள். இவ்விரு வகையான பொருட்கள் மீதும் பற்றின்றி இருத்தலே வைராக்யம்.
பற்றின்மையும், வெறுப்பும் ஒரே விதமான குணங்கள் அல்ல.
பொருட்கள் கொடுக்கும் இன்பத்திற்கு அடிமையாகாமல் இருத்தலே பற்றின்மை ஆகும்.

வைராக்யத்தை எந்தெந்த உபாயங்களின் மூலம் அடையலாம்?
வைராக்யத்தின் மூல காரணம் விவேகம் ஆகும். ஆனால் விவேகமே வைராக்யத்தைக் கொடுத்து விடாது. எனவே கீழ்க்காணும் உபாயங்களை மேற்கொள்ள வேண்டும்.

1. விவேக அப்யாஸம் அடைந்த அறிவை மீண்டும், மீண்டும் மனதில் கொண்டு வந்து பயிற்சி செய்தல்.
2. துக்க தோஷ அனுதர்ஸனம் – பொருட்கள் சிறு,சிறு இன்பத்தை அளித்தாலும், அவை இறுதியில் துன்பத்திற்கே வழி வகுக்கின்றன என்ற தெளிவு.
3. உலகின் பொருட்கள் நிலையற்றது என்ற அறிவை மீண்டும், மீண்டும் கொண்டு வருதல்.
4. பொருட்களை அன்பவிக்கும் என் புலன்கள் நிலையற்றவை என்று தெளிதல்.
5.பலஹீனத்துவம் – பொருட்கள் என்னையும், என் புலன்களையும் பலவீனப்படுத்தும்.
6. அத்ருப்திகரத்வம் – இவ்வுலகில் எப்பொருளுக்கும், எம்மனிதனுக்கும் ஒருவனை முழுமையாகத் திருப்திப்படுத்தும் ஆற்றல் கிடையாது.
7. எந்தப் பொருளுக்கு அடிமையாகி விடுகிறோமோ அந்தப்பொருளை பகிர்ந்து கொடுக்கும் எண்ணம் வராது.
8. பொருட்கள் நம் சுதந்திரத்தைப் பறித்து விடும்.
இது போன்ற தொடர்ந்த விவேக அப்யாஸமே நாளடைவில் வைராக்யமாகப் பரிணாமம் அடையும்.

சங்கல்பத் த்யாகம்
ஒரு பொருளைப் பற்றி நினைத்து, நினைத்துதான் அப்பொருள் மீது பற்று வருகிறது.
இது போன்ற சங்கல்பத்திற்குக் காரணம், ஸோபனா அத்யாஸம். அதாவது அது எனக்கு
நன்மையைத் தரும் என்னும் எண்ணம்.
எனவே வைராக்யம் பூரணமடைய விஷயத் தியானம் செய்யாமல் இருக்க வேண்டும்.

சத்சங்கம்
சிறு சிறு வைராக்யமுள்ளவர்கள் ஒன்று கூடும்போது அவர்கள் ஒருவ்ருக்கொருவர்உதவி செய்து கொள்வதால் வைராக்யம் மேலும் வளர்கிறது.
நம்மை விட வைராக்யம் அதிகமுள்ளவர்களிடம் பழகி நம் வைராக்யத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கர்மயோகம்
கர்மயோக முறைப்படி நம் தர்மத்தை அனுசரித்து வாழ்தல் வைராக்யத்தைத் தரும்.
விசாரம் செய்து ஞானம் வரவில்லையெனில் மீண்டும் மீண்டும் விசாரம் செய்.
கர்மயோகம் செய்து வைராக்யம் வரவில்லையெனில் மீண்டும் மீண்டும் கர்மயோகம் செய் என்று ஒரு கூற்று உண்டு.

வைராக்யத்தின் பலன் என்ன?
தைத்ரிய உபநிஷத் ஸ்லோகம் ஒன்று கீழ்வருமாறு கூறுகிறது.
ஒரு பொருளை அனுபவிக்கும் போது ஒரு மடங்கு சுகம் எனில், அந்தப் பொருள் மீது
உள்ள வைராக்யம் நூறு மடங்கு சுகம் தரும்.
சாஸ்த்ரப் ப்ரவிருத்தி – வைராக்யம் சாஸ்திரம் நோக்கி, நிலையானதை நோக்கி
நம்மைச் செலுத்தும்.
சத்குண ஹேது: வைராக்யம் நற்பண்புகளான தெய்வீக குணங்களை அடைய உதவும்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை