கடிதங்கள்

அன்புடையீர்,
ஸ்வாமிஜியின் வகுப்புகளை வீட்டிலேயே கேட்டுப் பயனடைந்து வருகிறேன்.
நான் திருமணமானவன். எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. எனக்கும் என் மனைவிக்கும்
வேதாந்தம் பயில்வதில் மிகுந்த ஆர்வம் . ஸ்வாமி ஓம்காரானந்த மற்றும் ஸ்வாமி குருபரானந்த
இருவரின் வகுப்புகளையும் ஒலி வடிவில் கேட்டு வருகிறோம்

இருப்பினும் குரு ஒருவர் அருகாமையிலிருந்து பயில ஆசைப்படுகிறோம்.

வேதபுரியில் மூன்றாண்டு வகுப்புகள் நடப்பதாக அறிந்தோம்.

அதுபற்றிச் சற்று விளக்க முடியுமா. நாங்கள் அங்கு அருகிலேயே வீடு எடுத்துத் தங்கி

பயில இயலுமா என்பதைச் சற்று விளக்கவும்.

ஸ்வாமியின் பாதங்களுக்கு நமஸ்காரங்கள்.

நன்றி.
ஜெகதீஷ் குமார்.
பேரன்பிற்குரிய ஸ்ரீஜகதீஷ் குமார் அவர்களுக்கு,
பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்கள் தங்கள் பரிபூரண நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.
தாங்களும் தங்கள் மனைவியும் வேதாந்தம் பயில்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருப்பதை அறிந்து மகிழ்கிறார்கள்.
தற்சமயம், தேனி ஆஶ்ரமத்தில், மூன்றாண்டு வகுப்புகள் நிறைவு பெற்றுவிட்டன.
ஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்கள் ஜ்ஞாந யஜ்ஞத்திற்காக இடைவிடாது பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தாங்கள் தேனி ஆஶ்ரமத்தில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொள்ளலாம்.
தங்களுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்களை அனுப்பினால், வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்குத் தெரிவிக்க வசதியாக இருக்கும்.
பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்களின் அருளாணைப்படி,
ஸ்ரீ குரு ஸேவகி,
க்ருஷ்ணவேணீ  

Please visit http://vedaneri.org/
தங்கள் கடிதத்துக்கு மிக்க நன்றி.

நாங்கள் இருவரும் மாலத்தீவுகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறோம்.

ஸ்வாமிஜியின் வகுப்புகள் பெரும்பாலும் அனைத்தும் ஒலிவடிவில் என் நண்பன் மூலம் கிடைக்கப்பெற்று

வீட்டில் கேட்டு வருகிறோம்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியா வருவோம். அக்காலத்தில் நடைபெறும் வகுப்புகள் குறித்து
தாங்கள் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்


ஞான வேள்வியில் ஈடுபட்டுள்ள தங்கள் அனைவர் பாதங்களிலும், ஸ்ரீ ஸ்வாமிஜியின் பாதகமலங்களிலும் விழுந்து வணங்குகிறேன்.

நன்றி.
ஜெகதீஷ் குமார்

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை