சற்குணம் என்ற அசல் கலைஞன்
சமீபத்தில் மூன்று தமிழ் திரைப்படங்கள் பார்த்தேன் . எங்கேயும் எப்போதும் , தெய்வத் திருமகள் மற்றும் வாகை சூட வா . ஆச்சரியமூட்டும் வகையில் அதில் இரண்டு படங்கள் நல்ல கருத்துக்களைச் சொல்லும் லேசான பிரசார தொனி கொண்ட கதைகளைச் சொல்பவை . எங்கேயும் எப்போதும் பேருந்து விபத்து ஒன்றை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது . பேருந்தில் பயணம் செய்பவர்களையும் அவர்களது பின்புலத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களோடு நமக்கு உணர்வு பூர்வமானதொரு உறவை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் . பிரதான கதை மாந்தர்கள் மட்டுமின்றி விபத்துக்குள்ளாகும் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளுமே மனதில் நன்கு பதிந்து விடுகின்றனர் . ஜெய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் . எந்த போலித் தோரணைகளுமின்றி இயல்பாக நடிக்கக் கூடியவர் . ஒரு சராசரி குறு நகரத்து இளைஞனை நினைவு படுத்தும் தோற்றம் கொண்டவர் . அவரது உரையாடல் வெளிப்பாடு தனித்துவமும் , எளிமையும் கொண்டது . அஞ்சலியும் அப்படியே . தமிழ்த் திரைக்கதாநாயகிகளில் நல்ல திரைப்படங்