அதுதான் நீ

என்னைத் தவிர யாரால் இயலும்?
இவ்வாழியில் நீந்திக் களிக்க
கற்பனைகளால் என்னைப் புனைந்து கொள்ள
எல்லாவற்றிற்கும் மேலெழும்ப முயன்றபடி இருக்க
அறியா நிலங்களைத் தொடும் துணிச்சல் கொண்டிருக்க
இம்முயற்சியில் என்னையே கிழித்துக் கொள்ள
யாரால் இயலும் என்னைத் தவிர?

நானே ஆழியென்று அறிவார்ந்த அலையொன்று 
இயம்பும் வரைக்கும்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை